தமிழ்நாடு
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்!

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதியானது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவருக்கு ஒமிக்ரான் வைரஸ் சோதனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சிங்கப்பூர் ஹாங்காங் போன்ற நாடுகளிலும் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் நேற்று 5 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது என்பதும் அதன் பின்னர் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பில் கண்டறியப்பட்டதால் இதுவரை இந்தியாவில் ஏழு பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் பல நாடுகளில் பரவி வரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் பரவி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





















