தமிழ்நாடு
திமுக ஒரு தீய சக்தி, விரைவில் ஆட்சிக்கு ஆபத்து: டிடிவி தினகரன்
திமுக ஒரு தீய சக்தி என்றும் திமுக ஆட்சிக்கு விரைவில் ஆபத்து வரும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடி தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் 150% சொத்து வரியை உயர்த்தி மக்களை கடும் சுமைக்கு உள்ளாக்கி உள்ளார்கள் என்றும் கூறினார்.
பல்வேறு பிரச்சனைகளுக்காக போராடும் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவின் இந்த விலைவாசி உயர்வை கண்டித்து ஏன் போராடவில்லை? என்று கேள்வி எழுப்பிய டிடிவி தினகரன், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் திமுக ஒரு தீய சக்தி என்றும் பொய்யான வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்து விட்டு தற்போது தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது என்றும் விரைவில் திமுக ஆட்சிக்கு ஆபத்து வரும் என்றும் திமுக மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
பிரதமர் மோடி குறித்து இளையராஜா கூறிய கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், ‘இளையராஜா அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்றும், அது அவருடைய தனிப்பட்ட கருத்து’ என்றும் தெரிவித்தார்.