Connect with us

தமிழ்நாடு

தனது காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி: காரணம் மனைவியா?

Published

on

தனது காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி ஒருவர் நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயலில் உள்ள பாஜக பிரமுகர் சதீஷ் குமார் என்பவர் வீட்டில் இருந்த நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் தீ வைத்து விட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் மூலம் சென்னை மதுரவாயலில் உள்ள பாஜக மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் தனது காருக்கு தானே தீ வைத்துவிட்டு மர்ம நபர்கள் எரித்து விட்டதாக நாடகமாடியது தெரிய வந்தது.

மேலும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தபோது, ‘காரை விற்று தனக்கு நகை வாங்கி தரும்படி சதீஷ்குமாரின் மனைவி தொல்லை கொடுத்ததால் அவர் அந்த காருக்கு தீ வைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனது காருக்கு தானே தீ வைத்து விட்டு நாடகமாடிய பாஜக நிர்வாகியால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?