தமிழ்நாடு
தனது காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி: காரணம் மனைவியா?
தனது காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி ஒருவர் நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயலில் உள்ள பாஜக பிரமுகர் சதீஷ் குமார் என்பவர் வீட்டில் இருந்த நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் தீ வைத்து விட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் மூலம் சென்னை மதுரவாயலில் உள்ள பாஜக மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் தனது காருக்கு தானே தீ வைத்துவிட்டு மர்ம நபர்கள் எரித்து விட்டதாக நாடகமாடியது தெரிய வந்தது.
மேலும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தபோது, ‘காரை விற்று தனக்கு நகை வாங்கி தரும்படி சதீஷ்குமாரின் மனைவி தொல்லை கொடுத்ததால் அவர் அந்த காருக்கு தீ வைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனது காருக்கு தானே தீ வைத்து விட்டு நாடகமாடிய பாஜக நிர்வாகியால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.