Connect with us

தமிழ்நாடு

ஆணழகன் போட்டியில் கலந்துகொண்ட 21 வயது இளைஞர் மயங்கி விழுந்து மரணம்…

Published

on

கடலூர் மாவட்டத்தில் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட சேலத்தை சேர்ந்த 21 வயதான ஹரிஹரன் என்ற இளைஞர் பயிற்சியின் போது மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#image_title

தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி ஒன்று கடலூர் மாவட்டம், வடலூர் பண்ருட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலிருந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூறுக்கும் அதிகமான இளைஞர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான ஹரிஹரன் என்ற இளைஞர் 75 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டார்.

75 கிலோ எடைப்பிரிவில் மேடை ஏறத்தயாரான ஹரிஹரன் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது. 21 வயதான ஹரிஹரன் போட்டியில் பங்கேற்பதற்காக அளவுக்கதிகமான உடற்பயிற்சியில் ஈடுபட்டாரா அல்லது உணவுக்கட்டுப்பாடுடன் உடற்பயிற்சி செய்தாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?