இந்தியா
குழந்தைக்கு ஏங்கும் ராகுல் காந்தி! ஆனால் திருமணம் எப்போது?

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தற்போது 52 வயதாகிறது. ஆனால் அவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. சிங்கிளாகத்தான் உள்ளார். இந்நிலையில் அவர் தான் ஏன் திருமணம் செய்யாமல் இருப்பதாக தெரியவில்லை என்றும் தனக்கு குழந்தைகள் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

#image_title
இந்தியாவின் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தின் வாரிசும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் ஆரம்பித்து காஷ்மீரில் முடித்தார். இதனையடுத்து இத்தாலிய பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த ராகுலிடம் அவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் விசித்திரமான பதிலை அளித்துள்ளார்.
52 வயதிலும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, ‘விசித்திரமாகத்தான் இருக்கிறது. நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. செய்ய நிறைய வேலைகள் இருக்கின்றன என்றார். மேலும், எனக்கு குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று பதிலளித்தார் அவர்.
மேலும் இந்த பேட்டியில், இந்திய ஒற்றுமை பயணம் முடியும் வரை தாடியை எடுக்கக்கூடாது என்று முடிவு செய்திருந்தேன். தற்போது பயணம் முடிந்துவிட்டதால் தாடியை எடுக்கலாமா வேண்டாமா என இனிதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.




















