வணிகம்
பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு விரைவில் வெளியாகுமா? – அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
Published
8 மாதங்கள் agoon
By
Poovizhi
பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு விரைவில் வெளியாகுமா? – அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) மீண்டும் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி அரசு ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2002 ஆம் ஆண்டு வரை OPS திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் பணிக்கொடையாகவும், ஓய்வூதியமாகவும் பலன்களை பெற்றனர். ஆனால் 2003-ஆம் ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (NPS) அறிமுகப்படுத்தப்பட்டதால் OPS ரத்து செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து பல மாநில அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக, ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் OPS-ஐ மீண்டும் கொண்டு வந்துள்ளன. ஆனால் தமிழகத்தில் இன்னும் NPS திட்டமே செயல்படுகிறது.
2021 தேர்தல் அறிக்கையில் OPS-ஐ மீண்டும் கொண்டு வருவதாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் 4 ஆண்டுகள் கடந்தும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
செப்டம்பர் 30-க்குள் OPS மீண்டும் அமல்படுத்தப்படவில்லை என்றால் கோட்டை முற்றுகை பேரணி நடத்தப்படும் என ஊழியர் அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதனால் OPS தொடர்பான அறிவிப்பு செப்டம்பர் இறுதிக்குள் அல்லது அக்டோபர் முதல் வாரத்திலேயே வெளிவரும் என தகவல்கள் வெளியாகி, ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

ஓய்வூதிய திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு – அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்!

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாளை அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை | குஷியான அறிவிப்பு வருமா?

பழைய ஓய்வூதியத் திட்டம் மீட்பு கோரிக்கை: கருப்பு பேட்ஜ் அணிந்து அரசு ஊழியர்கள் போராட்டம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) மீண்டும் அமல்படுத்தப்படாது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

















