இந்தியா
மாற்றுத் திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும்.

தமிழ்நாட்டிலுள்ள அணைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிலும் நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் சட்டம் 16.04.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் முன்மொழியப்பட்டு தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும்.
தமிழ்நாடு அரசின் இந்த புதிய சட்டத் திருத்தம் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் பெறும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை
கிராமப் பஞ்சாயத்து – 12,913 நபர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி – 650 நபர்கள்
ஊராட்சி ஒன்றியம் – 388 நபர்கள்
மாவட்ட ஊராட்சி – 37 நபர்கள்
மொத்தமாக 13,988 மாற்றுத் திறனாளிகள் பிரதிநிதித்துவம் பெறுவர்.
இவர்கள் அணைவரும் நியமன உறுப்பினராக இருப்பார்கள். இவர்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்த விதிமுறைகளும் அறிவிப்புகளும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.














