உலகம்
10,000 ஆயிரம் பேரை கொலை செய்ய உதவி செய்த பெண்: வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை!
பத்தாயிரத்துக்கும் அதிகமான பேரை கொலை செய்ய உதவிய பெண்ணொருவருக்கு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை அளித்த நீதிபதி தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் ஹிட்லர் ஆட்சி நடைபெற்றது என்பதும் அப்போது அரசியல் மற்றும் ராணுவ கைதிகள் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஹிட்லரின் ஆட்சியில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்ய உதவி செய்த அரசு அதிகாரிகள் தேடி கண்டு பிடிக்கப்பட்டு தற்போது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சித்திரவதையில் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் அதில் நாஜிக் கன்சன்ட்ரேஷன் கேம்ப் என்று அழைக்கப்பட்ட சித்திரவதை கூடத்தில் வேலை பார்த்த பெண் ஒருவர் மீதான வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்த பெண் சித்திரவதைக் கூடங்களில் 1942 முதல் 1945 வரை மூன்று ஆண்டுகள் பணியாற்றி இருப்பதாகவும் அங்குள்ள கைதிகளின் 10,000 பேரின் மரணத்துக்கு இவரும் ஒரு காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் பெண் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை வழங்கியுள்ளது.
தற்போது 97 வயதே நிரம்பிய அவர் அவருக்கு 2 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்குவதற்கு காரணம், குற்றம் நடந்த போது அவருக்கு வெறும் 18 வயது என்றும் எனவே சிறார் சட்டத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி விளக்கம் கூறியுள்ளார்.