இந்தியா
90 ஆண்டு கனவான திருப்பத்தூர்-ஓசூர் பாசஞ்சர் ரயில் திட்டம் நிறைவேறுகிறது. – ஆலோசனை குழு உறுப்பினர் தகவல்

தென்மேற்கு ரயில்வே கோட்ட பயனாளிகள் ஆலோசனை குழு உறுப்பினர் சின்னகுட்டப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
பையப்பனஅல்லியில் இருந்து ஓமலூர் வரை இரட்டை ரயில்பாதை பணிகள் முடிந்ததும் பாசஞ்சர் ரயில்கள் விரிவாக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பொம்மசந்திரா முதல் அத்திப்பள்ளி வரை உத்தேசிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டம் சில தொழில்நுட்பக் காரணங்களால் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது. இந்த பணிகளை முடித்துத் தருவதாக கர்நாடக முதல்வர் உறுதி அளித்துள்ளார். இந்த திட்டம் முடிந்த பிறகு ஓசூர் மாநகருக்கு மெட்ரோ ரயில் வசதி செய்து கொடுக்கப்படும். என தமிழ்நாடு முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
தென்னக ரயில்வே நிர்வாகம் திருப்பத்தூரில் இருந்து ஓசூர் மாநகருக்கு ரயில் வசதி ஏற்படுத்தும் நோக்கத்தில் எல்லா முதற்கட்ட வேலைகளும் செய்து முடித்துள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்திய அரசு ஒப்புதலுக்காக அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறது. இதனால் மக்களின் 90 ஆண்டு கால கனவாக இருந்த திருப்பத்தூர் – ஓசூர் ரயில் திட்டம் நிலைவேறும் நிலையில் உள்ளது
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.














