இந்தியா
அறிவிக்கப்பட்டது 5 மாநில சட்டமன்ற தேர்தல் அட்டவணை

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம் மற்றம் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அட்டவணையை அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார். ஏற்கனவே இந்த 5 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தல் முடிந்த பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலையில் அணைத்து தொலைக்காட்சிகளிலும் சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என செய்திகள் வெளியாகின. அதன்படி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு.ஞானேஷ்குமார் 4 மணிக்கு அறிவிக்கத் தொடங்கினார்.
இந்த தேர்தல் பணிகளில் 25 லட்சம் தேர்தல் அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்.
5 மாநிலங்களில் மொத்தம் 824 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
1444 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் 75032 வாக்குச் சாவடிகள் உள்ளன. வருசநாடு மற்றும் வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது.
12.51 லட்சம் பேர் தமிழ்நாட்டில் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
5.67 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
நகர்ப்புறங்களில் 30,967 மற்றும் கிராமப்புறங்களில் 44,065 வாக்குச் சாவடிகள் உள்ளன.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தரைத்தளத்திலேயே வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
| மாநிலம் | தேர்தல் தேதி | வாக்கு எண்ணிக்கை தேதி |
| அஸ்ஸாம் | ஏப்ரல் – 9 | மே – 4 |
| கேரளா | ஏப்ரல் – 9 | மே – 4 |
| புதுச்சேரி | ஏப்ரல் – 9 | மே – 4 |
| தமிழ்நாடு | ஏப்ரல் – 23 | மே – 4 |
| மேற்குவங்கம் | ஏப்ரல் – 23 மற்றும் 29 | மே – 4 |
| மாநிலம் | வேட்புமனு தாக்கல் | கடைசி நாள் | பரிசீலனை | திரும்ப பெற |
| புதுச்சேரி | மார்ச் 16 | மார்ச் 23 | மார்ச் 24 | மார்ச் 26 |
| தமிழ்நாடு | மார்ச் 30 | ஏப்ரல் 6 | ஏப்ரல் 7 | ஏப்ரல் 9 |
தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அதன்படி அரசு சார்பில் புதிய திட்டங்கள் அறிவிப்புகள் வெளியிடமுடியாது. ரூ.50000க்கு மேல் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். தலைவர்களின் படங்கள் சிலைகள் திரை போட்டு மூடப்பட வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கட்டங்கள் நடத்தக்கூடாது. மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்க வேண்டும். அரசு வாகனங்கள் அலுவலகங்கள் மற்றும் ஊழியர்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது. தேர்தல் ஆணையத்தின் அனுமதி இன்றி அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியாது.
தேர்தல் தொடர்பான அணைத்து தகவல்களையும் ECI NET என்ற ஒரே ஆப் – ல் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.














