தமிழ்நாடு
17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை, 12 வயது சிறுவன் கைது: தஞ்சையில் பரபரப்பு
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிஞ்சிலேயே பழுத்தது என்ற பழமொழிக்கு ஏற்ப சிறுவயதிலேயே பாலியல் உறவில் ஈடுபடும் சிறுவர் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 17 வயது சிறுமி ஒருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குழந்தை பெற்றுள்ளார். இதனை அடுத்து அவரது பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த குழந்தைக்கு காரணம் 12 வயது சிறுவன் என 17 வயது சிறுமி தெரிவித்துள்ளது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் 12 வயது சிறுவனை கைது செய்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
மேலும் சிறுமியின் புகார் தொடர்பாக முறையாக விசாரணை செய்ய வேண்டும் என காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.