தமிழ்நாடு
இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்: மாணவர்களுக்கு சில முக்கிய அறிவிப்புகள்!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியிருப்பதை அடுத்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வு தொடங்கிய நிலையில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் 9.38 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக 308 வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று முறைகேடு செய்வதை தடுப்பதற்காக 3050 பறக்கும் படைகள் மற்றும் 1241 ஸ்டாண்டிங் ஸ்குவாட் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது .
தேர்வு மையத்திற்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் தேர்வர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வு மையத்தில் செல்போன் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் பருவத்தேர்வை ரத்து செய்வதோடு நிரந்திர தடை விதிக்கப்படும் எனவும் தேர்வில் காப்பியடித்தால் மாணவரின் தேர்வை ரத்து செய்து, தேர்வு எழுத ஓராண்டுக்கு தடை விதிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.