Connect with us

தமிழ்நாடு

ஒரு யூனிட் ஆற்று மணல் ரூ.1000 மட்டுமே.. தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!

Published

on

தமிழ்நாடு அரசு ஒரு யூனிட் ஆற்று மணல் 1000 ரூபாய் என அடிப்படை விலையை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மணல் குவாரிகளை தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு இருந்த நிலையில், மக்கள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளதாகத் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் குறைந்தபட்ச விலை 1000 ரூபாய் 1 யூனிட் மணல் என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இன்று காலை தமிழ்நாடு மக்கள் ஆன்லைன் மூலம் மணலை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் அறிவித்து இருந்தார்.

அமைச்சர் துரை முருகன் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “பொதுமக்கள் புதிதாக வீடு கட்டுதல், பழுது பார்த்தல் மற்றும் பிற கட்டிடப் பணிகளைச் சிரமம் இன்றி மேற்கொள்வதற்கு மணலை எளிமையாகப் பொதுமக்கள் பெற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தர்.

அதைச் செயல்படுத்தும் வகையில் பொதுமக்கள் இணைய வழியில் மணலுக்கான பணத்தைச் செலுத்தி சிரமமின்றி மணலை எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

காலை 8 மணி முதல் பிறபகல் 2 மணி வரையில் பொது மக்கள் பதிவு செய்ததற்கான மணல் விநியோகம் செய்யப்படும். மீதம் உள்ள மணலை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையில் இருப்பை பொருத்து வழங்கப்படும்” என அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆற்று மணலை ஆன்லைனில் புக் செய்வது எப்படி?

tnsand.in என்ற இணையதளம் அல்லது TNsand என்ற செயலி மூலம் ஆன்லைனில் மணல் ஆர்டர் செய்யலாம். பணத்தையும் ஆன்லைன் மூலமே செலுத்தலாம்.

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?