இந்தியா
வீட்ல இருக்கிற லேடீஸ் வேலையே செய்யமாட்டாங்க போலிருக்கு?

இன்று காலை மளிகை கடை அண்ணாச்சி என் வீட்டுக்கு சில மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி செய்துவிட்டு என்னிடம் புலம்பினார்.
“நம்ம மக்கள் ஏன் ஸார் இப்படி இருக்காங்க?”
” எப்படி?”
” வீட்ல இருக்கிற லேடீஸ் வேலையே செய்யமாட்டாங்க போலிருக்கு?
நாளுக்கு நாள் இட்லி மாவு பாக்கெட்டுகளுக்கு ரொம்ப கிராக்கியாயிருக்கு? போன மாசம் வரைக்கும் 100 kg பாக்கெட் வித்தேன். இந்த மாசம் 200 kg தாண்டிடுச்சு. ஆஃபீஸிலிருந்து வீடு திரும்பற எல்லா ஆண்களும் தினசரி மாவு பாக்கெட் வாங்காமே, வீட்டுக்குப் போறதேயில்லை. என்னோட கடையில் மட்டுமே தினமும் 200 kg. மத்த கடைகள்ல விக்கிற மாவையும் சேர்த்து கணக்கு போட்டா மயக்கமே வந்துரும் போலிருக்கு. மாவு உடனடியா புளிக்க வைக்க செயற்கை ஈஸ்ட், மிருதுவாயிருக்க சோடா உப்பு, மாவு வெள்ளை வெளேர்ன்னு இருக்கிறதுக்காக சுண்ணாம்பு தண்ணி கலக்கறாங்க ஸார். ஆனா சப்ளை பண்றவங்க கிட்ட கேட்டா மத்த பிராண்ட் அப்படி பண்றாங்க.நாங்க அப்படியில்லை ன்னு சொல்றாங்க.யாரை நம்பறதுன்னு தெரியலை.”
” இதெல்லாம் தெரிஞ்சும் நீங்க ஏன் விக்கறீங்க?”
” எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்ல ஸார்.ஆனா நான் மாவு இல்லேன்னு சொன்னா கஸ்டமர்கள் வேற கடைகளுக்கு போய் மாவு வாங்கிட்டு அதே கடையில் மத்த மளிகை சாமான்களையும் வாங்கிட்டு போயிடறாங்க.இதனால நம்ம வியாபாரம் பாதிக்குது. அதான் மனசை கல்லாக்கிட்டு விக்கறேன். என்னதான் வேலை பளு இருந்தாலும் நம்ம வீட்டு லேடீஸ் கொஞ்சம் சிரமம் பாக்காமே அரிசியையும், உளுந்தையும் ஒரு மணி நேரம் ஊறவெச்சு க்ரைண்டர்ல போட்டு மாவாக்கிகிட்டா இந்த கெமிக்கல்ஸ் மாவுக்கு குட்பை சொல்லிட்டு ஆரோக்கியமான இட்லி தோசை சாப்பிடலாமே ஸார்? ஏன் இந்தப் பெண்கள் இப்படி இருக்காங்க. வயித்துல ஏதாவது பிரச்சினை வந்துட்டா வாழற வாழ்க்கை நரகமாயிடும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க. உடல் ஆரோக்கியத்தைக் காட்டிலும் வேற எந்த விஷயமும் பெரிசில்லை.
இன்னிக்கு நூத்துக்கு எழுபது சதவீத வீடுகளில் க்ரைண்டர்கள்
வேண்டாத ஒரு பொருளா மாறிடுச்சு.
இந்த இட்லி மாவுதான் கொடுமைன்னா Half cooked சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம் ன்னு மக்களின் ஆரோக்கியத்தை பதம் பார்க்ககிற ரசாயனங்கள் கலந்த அரை வேக்காட்டு உணவுகளுக்கும் கிராக்கி ஸார் ”
என்று புலம்பி விட்டு போனார்.
………………………
நம் குடல் பகுதி ( Gut ) என்பது
நம்முடைய உடம்பின் ‘ இரண்டாவது மூளை’ என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.அண்ணாச்சியின் புலம்பலில் நியாயம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
நட்புகளே?




