இந்தியா
விஞ்ஞானிகள் போல இனி ஏ.ஐ.ஏஜெண்ட்களும் ஆய்வு செய்யும்

ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் சிந்தனைத் திறனுக்கு ஒரு மாற்றாக பயன்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.
டில்லி ஐஐடிஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகளைப் போலவே ஆய்வுக்கூடங்களில் நேர்த்தியாக சோதனைகள் நடத்தக்கூடிய ஏஐ ஏஜெண்டை (அய்லா) உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இந்த ஏஜெண்ட்கள் பரிசோதனைக் கூடங்களில் உண்மையான விஞ்ஞானிகளைப் போலவே இனி வரும் காலங்களில் சோதனைகள் நடத்தி முடிவுகள் அறிவிப்பதை நமது சந்ததியினர் காணமுடியும். இந்த ஏஐ ஏஜெண்ட் அய்லா சாட்பாட் போன்ற எளிய அம்சத்தை கொண்டுள்ளது. அதற்கு வழிமுறைகள் ஆங்கிலத்தில் கொடுக்கப்படும். இந்த ஏஜெண்ட் அவற்றை பெற்று குறியீடுகளாக மாற்றி சோதனைகளைச் செய்யும்.
இந்த ஏஐ மாதிரியை அறிஞர் இந்திரஜித் மண்டல் நேற்று டில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் விளக்கினார்.
அய்லா அணுசக்தி நுண்ணோக்கிகருவியைக் கட்டுப்படுத்தவும் சோதனைகளின்போது நிகழ்நேர முடிவுகளை எடுக்கவும் முடிவுகளை தானாகவே பகுப்பாய்வு செய்யவும் முடியும் என தெரிவித்து வியப்பில் ஆழ்த்தினார்.
இது தொடர்பாக பேராசிரியர் அனூப் கிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில் “அய்லா போன்ற தொழில்நுட்பம் இந்தியாவின் அறிவியல் சூழலையே மாற்றிவிட முடியும். இ.தனால் மனித சக்தி சேமிக்கப்டும்” என்றார்.













