இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 08.02.2026

- டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் மலர்த் தோட்டம் பலவேறு சுவையான அமசங்களுடன் பார்வையாளருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை மார்ச் 19 ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
- சிதம்பரம் நடராஜர் கோயிலில் 45வது நாட்டியாஞ்சலி விழா பிப்ரவரி 13 முதல் 17 வரை நடைபெற உள்ளது. 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
- உத்தர பிரதேசத்தில் காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு வீட்டில் வீடியோ கேம் விளையாடக்டாது உன்று பெற்றோர் கண்டித்ததால் 3 சகோதரிகள் 9வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதியுள்ளதாக கூறப்படும் கடிதத்தில் கொரியன் கேமை விட்டு தங்களால் வெளியெ வர முடியாதததால் இந்த முடிவை எடுத்தோம் என்று தெரிவித்திருக்கின்றனர்.
- இந்தியாவில் சிலவகை இனிப்புகளின் மேல் அடுக்கடுக்காக பயன்படுத்தப்படும் வெள்ளி வெள்ளீய தகடுகள் பயன்பாடு சமீபகால வெள்ளி விலை உயர்வால் குறைக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு பதிலா பிஸ்தா தோல் பாதாம் தோல் துருவல் ஆகியவை பயன்படுத்தப் படுவதாக கூறப்படுகிறது.
- எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தில் தனது பெயரை தொடர்புபடுத்தி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. என திபெத்திய மதகுரு தலாய்லாமா மறுப்பு.
- மே 3ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என தேசீய தேர்வு முகமை அறிவிப்பு. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தெர்வு எழுத இன்ற முதல் மார்ச் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ் ஆங்கிலம் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும். மே3 ம் தேதி பிறபகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறும்.














