இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 25.01.2026

- உலகம் இனி “தண்ணீர் பற்றாக்குறை“ என்ற நிலையைக் கடந்து மீள முடியாத “நீர் திவால்நிலை“ எனும் அபாயகரமான கட்டத்திற்குள் நுழைந்து விட்டதாக ஐநாவின் UNU-INWEH விஞ்ஞானிகள் எச்சரிக்கை
- பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வந்தேபாரத் ரயில்களில் தென்னை நார் தட்டுகள் பயன்பாட்டிற்கு அறிமுகம்
- அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிவிதிப்பால் இந்திய ஆடைத்துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை
- பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட உடல் சார்ந்த சிகிச்சை அளிப்போர் டாக்டர் என்ற அடைமொழியை பயன்படுத்துவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு. – இந்த அடைமொழி மருத்துவர்களுக்கானது மட்டுமல்ல. ஒரு துறையில் உச்சம் பெற்ற ஒருவர் பிறருக்கு கற்பிக்க தகுதி பெறுவதையே டாக்டர் என அழைக்கப்பட்டதாக நீதிபதி கருத்து.
- நம்ம சின்னம் விசில் உங்க சின்னம் விசில் வெற்றி சின்னம் விசில் கப்பு முக்கியம் பிகிலு என்று கூறி விசில் அடித்து தனது கட்சி சின்னத்தை அறிவித்த விஜய்.
- உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில் அந்த அமைப்பில் தன்னிச்சையாக இணைந்தது கலிபோர்னியா மாகாணம். – அமெரிக்காவில் ஒரு தமிழ்நாடு.
- சட்டத்தின் ஆட்சி தோல்வி அடையும்போது யாராவது வழக்கு தொடரட்டும் என்று காத்திராமல் தாமாக முன்வந்து ஐகோர்ட்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்.
- WhatsApp செயலியில் விளம்பரங்கள் இல்லாத அனுபவத்தைப் பெற விரைவில் புதிய கட்டணச் சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்த Meta திட்டம் என தகவல்.
- பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் பால் காபி தேநீர் மற்றம் சூடான சாம்பார் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதால் மனிதர்களுக்கு ஏற்படும் தீய விளைவுகள் பற்றி ஆய்வு செய்ய சென்னை ஐஐடி உதவியை நாடியுள்ளது அரசு – பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியில் “மைக்ரோ பிளாஸ்டிக்“ கண்டறியப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு தெரிவிப்பு
- குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 40000 பெண்கள் மாயமாகி உள்ளனர். -தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்.
- ஐக்கிய நாடுகள் சபையில் ஈரான் அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு.
- அன்றும் இன்றும் என்றும் தமிழ்நாடு இந்தித் திணிப்புக்கு எதிராக போராடும். -முதல்வர்.










