கிரிக்கெட்
என்ன மெத்தனம்.. அலட்சியம்.. பிட் இல்லாத ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுத்தது ஏன்?

அகமதாபாத்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் எடுக்கப்பட்டது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.
இதில் பெரும் திருப்பங்களுக்கு, டிவிஸ்டுகளுக்கு இடையில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. ,இதில் முதலில் பின்தங்கி இருந்த இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவை விட லீட் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் குவாஜா அதிரடியாக 180 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது .
அதன்பின் இறங்கிய இந்திய அணி தற்போது 571-10 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 91 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி நிதானமாக ஆடி சதம் அடித்தார். 364 பந்துகள் பிடித்த அவர் 15 சிக்ஸ் அடித்து 186 ரன்கள் எடுத்தார்.

Why does Shreyas Iyer not play for India in the 4th test 1 innings against Australia
கடைசி கட்டத்தில் இவருடன் சேர்ந்து ஆட ஆள் இல்லாததால் தேவையின்றி வேகமாக ஆட முயன்று அவுட் ஆனார். இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடவில்லை. அணியில் இருந்தும் முதுகு வலி காரணமாக அவர் ஆடவில்லை. நேற்று அவர் முதுகு வலி இருப்பதாக கூறியதால் இன்று ஆடவில்லை. பிட்டாக இல்லாமல் இருக்கும் ஒருவரை அணியில் எடுத்தது ஏன்? இவருக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன்? என்று கேள்விகள் எழுந்துள்ளன. பிசிசிஐ மீது பலரும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இந்த தொடரின் கடைசி போட்டி ஆகும் இது. ஏற்கனவே இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்றுவிட்டது.