கிரிக்கெட்
வாஷி டேய்.. பண்ணுடா மச்சான் விடாத” – ஸ்ரீகாந்த் பேட்டி!

வாஷி டேய்.. பண்ணுடா மச்சான் விடாத”… தனது ஸ்டைலில் வாஷிங்டன் சுந்தருக்கு வாழ்த்து சொன்ன கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

SOGF கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடர் தெற்கு மண்டலம் 2 என்பது தென்னிந்தியா முழுவதும் உள்ள வீரர்களைக் கொண்டாடும் ஒரு மின்-விளையாட்டுப் போட்டியாகும். இந்த நிகழ்வு பாண்டிச்சேரி, சென்னை மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளிலிருந்து சிறப்பு ஆர்வத்தைப் பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் உலக மகளிர் ரேபிட் செஸ் சாம்பியன் திருமதி கோனேரு ஹம்பி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திரு.கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த்,”இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற அடிப்படையில் வெற்றி பெறும்” என்று நம்பிக்கை உள்ளதாகவும் பேட்டியளித்தார். மேலும் தனது ஸ்டைலில் ” வாஷி டேய்.. பண்ணுடா மச்சான் விடாத” என வாஷிங்டன் சுந்தருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வாழ்த்து சொன்னார்.















