தமிழ்நாடு
தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்: விஜயபிரபாகரன் ஆவேசம்!

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 12 தொகுதிகளில் தான் ஒதுக்கப்படும் என அதிமுக தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிக கட்சி தலைமையோ பாமகவுக்கு இணையாக 23 தொகுதிகள் வேண்டும் என்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று பேஸ்புக்கில் பதிவு செய்த எல்கே சுதீஷ், ‘எங்கள் முதல்வர் விஜயகாந்த் என்றும் எங்கள் சின்னம் முரசு என்றும் கூறியது தேமுதிக தனித்து போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று பெரம்பலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயபிரபாகரன் ’தலையே போனாலும் தலை உடைய மாட்டோம்’ என்று கூறியுள்ளார். விஜயபிரபாகரனின் இந்த ஆவேச பேச்சு தேமுதிகவை தனித்துவிடும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
கடைசி கட்டமாக அதிமுக 15 தொகுதிகள் தர தயாராக இருப்பதாகவும், ஆனால் தேமுதிக அதனை ஏற்று கொள்ள தயாராக இல்லை என்றும் தகவல் வெளிவந்துள்ளது.


















