தமிழ்நாடு
தயிர் கூடாது.. தஹியை பயன்படுத்துங்கள்! ஆவினுக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவு
சென்னை: ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி நிறுவனத்தின் தயிர் பாக்கெட்டில் “தஹி” என்ற வார்த்தையை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவைத்துள்ளது. இந்தி திணிப்பு சர்ச்சைக்கு இடையில் அவர்களின் இந்த உத்தரவும் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டில் “தஹி” என்ற ஹிந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும். கன்னடத்தில் மோசரு மற்றும் தமிழின் தயிர் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த கூடாது.
அட்டையில் தஹி என்று வார்த்தையை பயன்படுத்த வேண்டும். தேவை என்றால் மட்டும் பிராக்கெட்டில் தமிழ் மற்றும் கன்னட வார்த்தைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பிச்சை போடுவது போல் விதி ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.
இரண்டு மாநிலங்களிலும் ஹிந்தியை மக்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில் இந்த விவகாரம் கடும் எதிர்ப்பை சந்தித்து உள்ளது.இந்த விதியை பின்பற்றதா பட்சத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உரிமைகளை நீக்கவும் வாய்ப்பு உள்ளது. அதாவது ஆவின் மற்றும் நந்தினி அமைப்புகளின் உரிமைகளை ரத்து செய்யும் வாய்ப்புகள் உள்ளன.
இரண்டு மாநிலங்களிலும் மக்கள் கடுமையாக ஹிந்தி திணிப்பை எதிர்த்து வருகிறார்கள். ஹிந்தியால் தங்கள் மொழி பாதிக்கப்படுவதாக கடுமையாக புகார் வைத்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில்தான் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி நிறுவனத்தின் தயிர் பாக்கெட்டில் “தஹி” என்ற வார்த்தையை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவைத்துள்ளது. இந்தி திணிப்பு சர்ச்சைக்கு இடையில் அவர்களின் இந்த உத்தரவும் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.