Connect with us

இந்தியா

95% மக்களுக்கு பெட்ரோல், டீசல் தேவையில்லை: விலையுயர்வு குறித்து விளக்கமளித்த அமைச்சர்!

Published

on

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதும் பெட்ரோல் விலை நூறு ரூபாயை தாண்டி உள்ளது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை தொட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் உபி மாநிலஅமைச்சர் ஒருவர் பெட்ரோல் விலை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே 95 சதவீத மக்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் தேவைப்படாது என்று கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் உபேந்திர திவாரி என்பவர் இது குறித்து மேலும் கூறியபோது இந்தியாவில் வெறும் 5 சதவீத மக்களே நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர்களுக்கு மட்டும்தான் பெட்ரோல் தேவைப்படுகிறது என்றும் 95 சதவீத மக்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் தேவைப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் டீசல் விலை உயர்வால் வாகன வாடகை விலை உயரும் என்றும் அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்பதையும் செய்தியாளர்கள் சுட்டிக்காட்ட போது அவர் அதனை கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனிநபர் வருமானத்தை ஒப்பிடும்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் குறைவாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?