Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் தடையின்றி பால் விநியோகம்: அமைச்சர் நாசர் அறிவிப்பு!

Published

on

பால் கொள்முதல் விலையினை உயர்த்தக் கோரி, தமிழ்நாடு முழுவதிலும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் பால் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. இருப்பினும், தமிழ்நாட்டில் பால் விநியோகம் எந்தவித தடையுமின்றி நடைபெறுகிறது என பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

பால் கொள்முதல் விலை

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்தனர். இந்தப் பிரச்சனை தொடர்பாக சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், தோல்வியிலேயே முடிந்தது. இதன் காரணமாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டி தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம்

ஈரோடு மாவட்டம் இராயபாளையத்தில் சாலையில் மாடுகளை நிறுத்தியும், பாலை கீழே ஊற்றியும் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, பால் கொள்முதலில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லை என்றும், வழக்கம் போல் பால் கொள்முதல் நடைபெற்றதாகவும் ஆவின் நிர்வாகம் அறிவித்தது. ஒரு சில பால் உற்பத்தியாளர் சங்கங்களைத் தவிர, மற்ற சங்கங்கள் வழக்கமான அளவிற்கு பால் விநியோகம் செய்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நாசர் பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் குறித்து பேசுகையில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 9,354 சங்கங்களில் ஒரேயொரு சங்கம் மட்டுமே போராட்டத்தை அறிவித்துள்ளது என தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒரு இடத்தை தவிர்த்து, வேறெங்கும் பால் நிறுத்தம் இல்லை என்றும், தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெற்று வருவதாகவும், எந்த சூழலையும் சந்திப்பதற்கு தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் கூறினார்.

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?