Connect with us

சினிமா செய்திகள்

காஞ்சனா 3’ பட நடிகை திடீர் தற்கொலை: என்ன காரணம்?

Published

on

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடித்த ’காஞ்சனா 3’ என்ற படத்தில் நடித்த நடிகை ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காஞ்சனா 3’. இந்த படத்தில் ஓவியா. வேதிகா. நிக்கி டம்போலி மற்றும் அலெக்சாண்டரியா ஜாவி ஆகிய 4 நடிகைகள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அலெக்சாண்டரியா ஜாவி என்பவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் என்பதும் அவர் இந்த படத்தில் கிளாமராக நடித்து வந்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அலெக்சாண்டரியா ஜாவி தனது காதலருடன் கோவா வந்ததாகவும் அங்கு அவர் தங்கியிருந்த நிலையில் திடீரென அவருக்கும் அவரது காதலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து காதலர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நடிகை அலெக்சாண்டரியா ஜாவி திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த கோவா காவல்துறையினர் விரைந்து வந்து அலெக்சாண்டரியா ஜாவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது, அலெக்சாண்டரியா ஜாவி காதலர் ரஷ்யா சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் கோவாவில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?