Connect with us

உலகம்

இன்று மாலைக்குள் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும்: ஊழியர்களுக்கு டுவிட்டர் அதிரடி அறிவிப்பு!

Published

on

டுவிட்டர் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் தலைமை அலுவலகம் சிங்கப்பூரில் இயங்கி வரும் நிலையில் அந்த நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரும் இன்று மாலையே டுவிட்டர் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் நாளை முதல் அனைவருக்கும் வீட்டிலிருந்து பணிசெய்யும் வொர்க் ப்ரம் ஹோம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டுவிட்டரில் ஆசிய பசிபிக் தலைமை அலுவலகமான சிங்கப்பூரில் உள்ள இன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஈமெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அலுவலகத்தை இன்று மாலை 5 மணிக்குள் காலி செய்துவிட்டு உடனடியாக ஊழியர்கள் வெளியேற வேண்டும் என்றும் நாளை முதல் அனைவரும் வீட்டில் இருந்து பணி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த நிலை தொடரும் என்றும் அலுவலகம் வந்து பணி செய்வதற்கு உரிய சூழல் ஏற்பட்டவுடன் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் உள்ள ஆசிய பசுபிக் மண்டலத்திற்கு நூர் அசார் என்பவர் முக்கிய பணிக்காக நியமனம் செய்யப்பட்ட நிலையில் அவர் பணியில் இணைந்த ஒரு சில நாட்களிலேயே இந்த முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டுவிட்டரின் ஆசிய பசிபிக் பிராந்திய அலுவலகமே காலியாவதற்கு முக்கிய காரணம், அந்த கட்டடத்திற்கான வாடகை இன்னும் செலுத்தாததால், கட்டிடத்தின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் சிங்கப்பூர் அலுவலகத்திற்கு காலி செய்வதற்கு வாடகை செலுத்தாததை காரணம் என்று கூறப்படுகிறது.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக பெரும் நஷ்டத்தில் இருந்து வருகிறார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் அவர் சுமார் 15 லட்சம் கோடியை இழந்து உள்ளார் என்பதும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவரது சொத்து 26 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது அது 11 லட்சம் கோடியாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் பெரும் இழப்பை சந்தித்துள்ள எலான் மஸ்க் சிங்கப்பூரில் உள்ள ட்விட்டர் அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ட்விட்டரில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வாடகை செலுத்தாததால் அலுவலகமே காலி செய்யப்பட்டது ட்விட்டர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலைவாய்ப்பு39 mins ago

IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

kamal
சினிமா1 hour ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா1 hour ago

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்

தினபலன்1 hour ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (02/04/2023)!

வணிகம்2 hours ago

இன்று தங்கம் விலை (02/04/2023)!

சினிமா2 hours ago

’கர்ப்பமாக இருந்தால் நானே சொல்வேன்’- மணிமேகலை காட்டம்!

சினிமா செய்திகள்9 hours ago

தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

கிரிக்கெட்10 hours ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்10 hours ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்11 hours ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

வேலைவாய்ப்பு4 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!