இந்தியா
நேற்று வெறும் 30, இன்று 1399: இந்தியாவில் கொரோனா பலி பல மடங்கு உயர்வு
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து வருவதும் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2483 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 430,62,569 என்றும் இந்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 425,23,311 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1399 என்றும் இந்திய அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. நேற்று வெறும் 30 பேர்கள் மட்டுமே கொரோனாவால் உயரிழந்த நிலையில் இன்று 1399 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 523,622 என்றும், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15,636 என்றும் இந்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.