இந்தியா
ஜேசிபி இயந்திரத்தால் ஏடிஎம் மிஷினை நொறுக்கி ரூ.27 லட்சம் கொள்ளை!
ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஏடிஎம் மிஷினை அடித்து நொறுக்கி அதிலிருந்த 27 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஜேசிபி எந்திரம் மூலம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் ஜேசிபி எந்திரத்தை எடுத்து வந்த மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்தின் கதவை உடைத்து ஏடிஎம் மிஷினை சுக்குநூறாக நொறுக்கி அதிலிருந்த 27 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் .
மேலும் இந்த ஜேசிபி இயந்திரம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து திருடப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்துவரும் போலீசார் ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் மூலம் ஏடிஎம்மில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Again #Bulldozer
Seems this era going to dominate by bulldozers!!JCB Crane used to steal #ATM Machine in Maharshtra#Robbery pic.twitter.com/l2guf6zs3S
— hafeezullah kv (@hafeezkv) April 25, 2022