தமிழ்நாடு
தமிழ்நாட்டில் மெகா சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் மெகா சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், உலகின் 100 நாடுகளிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் பங்குபெறும் மெகா சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, 2024-ம் ஆண்டும் நடைபெறும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் ஈர்க்கப்பட உள்ள முதலீடுகள் மூலம் 2030-ம் ஆண்டு 1 டிரிலியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை தமிழ்நாடு எட்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.