Connect with us

தமிழ்நாடு

ரயில் வந்தது கூட தெரியாமல் செல்பி எடுத்த இளைஞர்கள்: அடையாளமே தெரியாமல் துண்டுதுண்டாக சிதறி பலி

Published

on

செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் ரயில் வந்தது கூட தெரியாமல் 3
இளைஞர்கள் செல்பி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது ரயில் மோதி துண்டு துண்டாக சிதறி பலியாகிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் அருகே அசோக்குமார், மோகன் மற்றும் பிரகாஷ் ஆகிய மூன்று பேர்கள் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை அவ்வப்போது பதிவுசெய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை மூவரும் ரயில் பாதையில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். மூவரும் சேர்ந்து செல்பி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று செல்லக் கூடிய விரைவில் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே அசோக், மோகன், பிரகாஷ் ஆகிய மூவரும் உடல் துண்டு துண்டாக சிதறி பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனே சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மூவரும் ஒரே தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் என்பதும் அவ்வப்போது செல்பி வீடியோவை ஆபத்தான நிலையில் எடுத்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது .

ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து உலகில் பல உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்த விழிப்புணர்வுகளை அவ்வப்போது சமூக ஆர்வலர்கள் எழுப்பிய போதிலும் தற்போது மேலும் மூன்று உயிர்கள் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?