Connect with us

இந்தியா

வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் டாடா ஸ்டீல்? இனி விமானத்தில் செல்வது போல் இருக்குமாம்..!

Published

on

டாடா ஸ்டீல் நிறுவனம் 200 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் இந்நிறுவனம் தயாரிக்கும் வந்தே பாரத் ரயில்களில் உள்ள இருக்கைகள் விமானத்தில் உள்ளது போல் சொகுசாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இந்த ரயில்களுக்கு பயணிகளின் ஆதரவு பெருகிக்கொண்டே வருகிறது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக சென்னையில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே துறையை திட்டமிட்டுள்ள நிலையில் 200 வந்தே பாரத் ரயில்களை டாடா ஸ்டீல் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் இது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் டாடா ஸ்டீல் நிறுவனம் தயாரிக்கும் வந்தே பாரத் ரயில்களில் உள்ள இருக்கைகள் முதல் ஏசி மற்றும் மூன்றடுக்கு பெட்டிகள் வரை தயாரிக்கப்படும் என்றும் இந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க Linke Hofmann Busch (LHB) என்ற நிறுவனத்துடன் டாடா ஸ்டீல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஜன்னல்கள், ரயிலின் உள் கட்டமைப்பு ஆகியவற்றையும் தயாரிக்க டாடா ஸ்டீல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயிலின் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்காக பன்னாட்டு உருக்கு நிறுவனத்திடம் இந்திய ரயில்வே ரூ.145 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் இந்த பணிகள் 15 மாதங்களில் முடிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

வந்தே பாரத் ரயிலின் இருக்கை அமைப்பிற்கு டாடா ஸ்டீல் நிறுவனம் மொத்த ஆர்டரை பெற்று இருப்பதாகவும் இந்த ரயிலில் உள்ள இருக்கையில் 180 டிகிரி வரை சுழலும் வகையில் இருக்கும் என்று விமானத்தில் பயணிகள் பயணம் செய்வது போன்ற சொகுசான வசதிகள் வந்தே பாரத் ரயிலில் வர இருப்பதை அடுத்து இந்தியாவிலேயே முதல் முறையாக பயணிகள் சொகுசாக பயணம் செய்யலாம் என்றும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணைத் தலைவர் தேபாஷிஷ் பட்டாச்சாரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் ரயில்களை அதிகரிப்பதன் மூலம் பயணிகளுக்கு சொகுசான பயணத்தை தர வேண்டும் என்பதே ரயில்வே நிர்வாகத்தின் நோக்கம் என்றும் இனிவரும் காலங்களில் 200 புதிய வந்தே பைரவர் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அந்த ரயில்கள் அனைத்தும் தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை விட கூடுதல் வசதி மற்றும் சொகுசு அம்சங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

எனவே இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வந்தே பாரத் ரயில்கள் மூலம் விமானத்தில் பயணம் செய்வது போன்ற சொகுசான பயணத்தை பயணிகள் அனுபவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியம்27 mins ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு1 hour ago

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

சினிமா1 hour ago

அனுராக் கஷ்யப்பை இயக்கும் சசிக்குமார்?

வேலைவாய்ப்பு2 hours ago

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 hours ago

இன்றைய தங்கம் விலை (26/03/2023)!

சினிமா செய்திகள்4 hours ago

‘கீர்த்தி சுரேஷிடம் இதைக் கேட்கவே மாட்டோம்’- மேனகா சுரேஷ்

இந்தியா5 hours ago

எதற்கும் நான் பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!

சினிமா செய்திகள்17 hours ago

‘பகாசூரன்’ படத்திற்கு திட்டமிட்ட எதிர்வினை’- இயக்குநர் மோகன்.ஜி

இந்தியா17 hours ago

இந்தியாவின் அடுத்த தலைமுறை கோடீஸ்வரர்கள் – தொழிலதிபர்கள் இவர்கள் தான்..!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்6 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

உலகம்6 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

கிரிக்கெட்7 days ago

2nd ODI: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

உலகம்6 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

வேலைவாய்ப்பு6 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

உலகம்5 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு5 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868