வணிகம்
எஸ்பிஐ வங்கியின் புதிய தலைவர் தினேஷ் குமார் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை!

எஸ்பிஐ வங்கியின் புதிய தலைவராக அக்டோபர் 7 முதல் தினேஷ் குமார் காரா பொறுப்பேற்றுள்ளார்.
முன்னதாக ரஜினிஷ் குமார் எஸ்பிஐ வங்கியின் தலைவராக இருந்தார். எனவே யார் இந்த தினேஷ் குமார் மற்றும் ஏன் இந்த முக்கிய பதவி இவருக்கு வழங்கப்படுகிறது என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
1) 2020 ஆகஸ்ட் 28-ம் தேதி வங்கி வாரிய பணியகம், எஸ்பிஐ வங்கி தலைவராக தினேஷ் குமார் காராவை பரிந்துரைத்தது.
2) தினேஷ் குமார் காராவுக்கு எஸ்பிஐ வங்கியில் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கியின் நிர்வாக இயக்குநர் பதவி வழங்கப்பட்டது. மூன்று வருடத்திற்குப் பிறகு அது மீண்டும் 2019-ம் ஆண்டு இரண்டு வருடம் நீட்டிக்கப்பட்டது.
3) எஸ்பிஐ வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கிகள் இணைந்த போது அதில் முக்கிய பங்காற்றியவர் தினேஷ் குமார் காரா.
4) எஸ்பிஐ வங்கியில் 1984-ம் ஆண்டு ப்ரோபெஷனரி அலுவலராகச் சேர்ந்த தினேஷ் குமாருக்கு ரீடெயில், கிரெடிட், எஸ்எம்ஈ, காப்ரேட் கிரெடிட், சர்வதேச வங்கி செயல்பாடுகள், கிளை நிர்வாகம் என 33 வருடங்கள் வணிக வங்கிகளின் அனுபவங்களைப் பெற்றுள்ளார்.
5) 59 வயதான தினேஷ் குமார் காரா, டெல்லி பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டமும், ஃபேகல்டி ஆப் மேனேஜ்மெண்ட்டில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.

















