தமிழ்நாடு
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசு, அரசு பள்ளி மற்றும் தமிழ் வழியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி கற்று, தற்போது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு “தமிழ்ப் புதல்வன் திட்டம்” மூலம் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கி வருகிறது. உயர்கல்வியில் மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வி பயில ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி கற்ற மாணவர்கள், கல்லூரி, பல்கலைக்கழகம், பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் சேரும்போது, இந்த நிதி உதவியை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
தகுதி விவரங்கள்
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை
அரசுப் பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் படித்திருக்க வேண்டும்தமிழ் வழிக் கல்வி (Tamil Medium) ஆக இருக்க வேண்டும்
தற்போது உயர்கல்வி (கல்லூரி / தொழில்நுட்ப கல்வி) பயிலும் மாணவராக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை
தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு மாணவர்கள் தனியாக நேரடியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
உயர்கல்வி பயிலும் கல்லூரி / நிறுவன ஒருங்கிணைப்பாளர் (College Coordinator) மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
மாணவர்கள் தங்கள் கல்லூரி ஒருங்கிணைப்பாளரை அணுக வேண்டும்
umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரங்கள் பதிவு செய்யப்படும்
தேவையான கல்வி மற்றும் அடையாள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு
தகுதியுள்ள மாணவர்களின் வங்கி கணக்கில்
மாதம் ரூ.1000 நேரடியாக செலுத்தப்படும்
இந்த திட்டம் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பொருளாதார சுமையின்றி உயர்கல்வியை தொடர அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.


















