சினிமா செய்திகள்
1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தாரா தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்?
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் ஆயிரம் கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு செய்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் உள்பட ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வரும் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர், ஏற்கனவே பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பு மட்டுமின்றி கல்குவாரி உள்பட மேலும் சில தொழில்களும் இவர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென சமீபத்தில் வருமான வரித்துறையினர் அவருடைய அலுவலகத்தில் சோதனை செய்தபோது கோடிக்கணக்கில் பணமும் தங்கமும் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
மேலும் ஒரு சில ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்த போது ஆயிரம் கோடிக்கு மேல் அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் அந்த கருப்பு பணத்தை ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகவும் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.