வணிகம்
ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை இருமடங்காக உயர்வு – தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்காக வழங்கும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், பண்டிகை கால முன்பணமும் ரூ.4,000லிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த சில வாரங்களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக பல நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அவை வருமாறு:
ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை ரூ.500 ➝ ரூ.1,000
பண்டிகைக் கால முன்பணம் ரூ.4,000 ➝ ரூ.6,000
அகவிலைப்படி (DA) உயர்வு: 53% ➝ 55%
அரியர் தொகை: ஜனவரி – மார்ச் மாதங்களுக்கு மட்டும் ரூ.1080 வரை
அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000 ➝ ரூ.20,000
தொழிற்கல்வி கல்வி முன்பணம் ரூ.1 லட்சம்
கலை, அறிவியல், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கல்வி முன்பணம் ரூ.50,000
திருமண முன்பணம் ரூ.5 லட்சம்
மகப்பேறு விடுப்பு: தற்போது தகுதிகாண் பருவத்திலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 சம்பள உயர்வு (ஏப்ரல் 1 முதல்)
இந்த அனைத்து அறிவிப்புகளும் தமிழக அரசின் நலத்திட்ட முயற்சிகளை வெளிப்படுத்துகின்றன. மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வுகளைப் போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அதே அளவு அல்லது அதிகமாக வழங்கும் வாய்ப்பு உள்ளது.

















