Connect with us

தமிழ்நாடு

சசிகலா அதிமுக உறுப்பினரே இல்லை: ஓபிஎஸ், ஈபிஎஸ் அதிரடி!

Published

on

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா அதிமுகவின் உறுப்பினர் கிடையாது என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்போது புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்சி சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஓபிஎஸ், அதிமுக என்னும் இயக்கம் எங்களிடம்தான் இருக்கிறது. தொண்டர்களும் எங்களிடம்தான் இருக்கிறார்கள். பொதுமக்களும் எங்களுக்குத்தான் ஆதரவு தெரிவிக்கின்றனர். தினகரன் தனியாக கட்சி ஆரம்பித்துவிட்டார். அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

ஏற்கனவே சசிகலா பொதுக்குழு மூலமாக நீக்கிவைக்கப்பட்டுவிட்டார். அவரிடமிருந்த பொறுப்புகளும் எடுக்கப்பட்டுவிட்டன. அவர் இங்கு அடிப்படை உறுப்பினரே கிடையாது என்றார். தொடர்ந்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கட்சியில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. நாங்களெல்லாம் உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துவிட்டோம். இதில் சேராதவர்கள் கட்சியில் இல்லாதவர்கள். சசிகலா புதிய உறுப்பினராகச் சேர்க்கப்படவில்லை. அதனால் அவர் கட்சியில் இல்லை என்றார்.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?