Connect with us

தமிழ்நாடு

“இப்படியொரு தீர்ப்பு வரும்னு எதிர்பாக்கலீங்க…”- புலம்பும் சரத்குமார்; சிறை உறுதியா?

Published

on

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம், ஓராண்டு சிறைத் தண்டனை விதிதத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தண்டனைக்குத் தற்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சரத்குமார் தரப்பு வழக்கை சுமுகமாக முடிக்கவில்லை என்றால் ஓராண்டு சிறைத் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்யும். 

இந்த சிறைத் தண்டனைத் தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை என்றும், இதற்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என்றும் சரத்குமார் விளக்கியுள்ளார். 

முன்னதாக நடிகர்கள் சரத்குமார், ராதிகா பங்குதாரர்களாக இருக்கக்கூடிய ‘மேஜிக் ப்ரேம்’ என்ற நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு திரைப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இதற்காக ‘ரேடியன்ஸ் மீடியா’ என்கிற நிறுவனத்திடம் இருந்து 1. 5 கோடி ரூபாயைக் கடனாக பெற்றுள்ளது. இந்தக் கடனை 2015 ஆம் ஆண்டுக்குள் திரும்பத் தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளது சரத்குமார் – ராதிகா தரப்பு.

ஆனால் அவர்கள் கடனை திருப்பிக்கொடுக்காமல் அடுத்தப் படத்தை தயாரித்துள்ளனர். இதனால் கோபமடைந்த ரேடியன்ஸ் மீடியா நிறுவனம், சரத்குமார் மற்றும் ராதிகா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதில் சரத்குமார் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட 7 செக்குகளும், அவரது வங்கிக் கணக்கில் பணமில்லாத காரணத்தினால், திரும்பி வந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், சரத்குமார் தரப்பு செக் மோசடியில் ஈடுபட்டதை ஓப்புக் கொண்டது. அதன் அடிப்படையில் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

தொடர்ந்து இந்தத் தீர்ப்பை எதிர்ப்பு சரத்குமார் தரப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. சரத்குமார் தரப்பின் வாதங்களை ஏற்றுக் கொண்டு தற்போதைக்கு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது நீதிமன்றம். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், ‘இப்படியான தீர்ப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை யாரும் ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு இருக்கவில்லை. பணத்தைத் திரும்பித் தர நாங்கள் தயாராகவே இருக்கிறோம். நாங்கள் கொடுக்க வேண்டிய தொகை 1.5 கோடி ரூபாய். அதே நேரத்தில் நாங்கள் கேரண்டியாக கொடுத்த தொகை இதை விட மிகவும் அதிகம். அப்படி இருக்கையில் சிறைத் தண்டனை விதிக்கப்படும் அளவுக்கு தீர்ப்பு கொடுத்தது ஏன் என்று தெரியவில்லை. இதை அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாக நான் பார்க்கவில்லை.

இது முழுக்க முழுக்க தொழில் சார்ந்த சிக்கல் தான். இந்த விவகாரத்தை அரசியல் பழிவாங்கல் என்று சொல்லி நான் தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. இது குறித்து சுமூக தீர்வு எட்டப்படும். சட்ட ரீதியாக நாங்கள் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்போம்’ என்று கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்பு: குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி

வணிகம்5 மணி நேரங்கள் ago

AI, Space Tech பங்குகளில் சரிவு: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

செய்திகள்9 மணி நேரங்கள் ago

தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

வணிகம்9 மணி நேரங்கள் ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்9 மணி நேரங்கள் ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா7 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா7 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா7 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

இந்தியா6 நாட்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

வணிகம்5 நாட்கள் ago

PM-VBRY திட்டம்: முதல் வேலை கிடைத்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை! இளைஞர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெங்களூரு DINK தம்பதியினர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா? ChatGPT சொன்ன பதில் இதுதான்

வணிகம்7 நாட்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

Translate »
Nordicnodes | professional saas tools for everyone.