Connect with us

தமிழ்நாடு

வேளச்சேரி ‘இவிஎம் பறிமுதல்’; சத்யபிரதா சாகு கொடுத்த ‘அடடே’ விளக்கம்- விளாசிய திருமா!!!

Published

on

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து அன்றே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அடைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீல்கள் மே 2 ஆம் தேதி நீக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். இப்படியான சூழலில், சென்னை, வேளச்சேரி தொகுதியில் ஒரு நபர் பைக்கில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நேற்று முன் தினம் இரவு இச்சம்பவம் நடந்துள்ள நிலையில், அதிமுக – பாஜகவினரே இதற்கு காரணம் என்று திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ‘தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. எனினும் எந்த ஒரு இடத்திலும் வாக்குப்பதிவு நிறுத்தப்படவில்லை. சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தி முடித்ததற்காகத் தலைமை தேர்தல் அதிகாரியையும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம். அதேநேரத்தில் வாக்கு எண்ணப்படும் மையங்களில் வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பை தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கோடை வெயில்,  கொரோனா பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையில் சுமார் 75%  வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தமது வாக்குரிமையை நிலைநாட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பாதுகாப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் தெளிவான விதிமுறைகளை வகுத்திருக்கிறது. அந்த எந்திரங்கள் 2 பூட்டுகளால் பூட்டப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் சென்னை வேளச்சேரி தொகுதியில்  வாக்குப்பதிவு முடிந்த பிறகு சென்னை மாநகராட்சி ஊழியர் இருவர் இருசக்கர வாகனங்களில் எவ்வித பாதுகாப்பும் இன்றி வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டு சென்றுள்ளனர். அதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் அவை வாக்குப் பதிவு செய்யப்படாத எந்திரங்கள் என்றும் அவற்றை கவனக்குறைவாகக் கையாண்டதற்காக அந்த மாநகராட்சி ஊழியர்களை இடைநீக்கம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இது ஏற்புடையதல்ல. வாக்குப்பதிவு எந்திரங்களை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மற்ற எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதைத் தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதி செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்பு: குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி

வணிகம்4 மணி நேரங்கள் ago

AI, Space Tech பங்குகளில் சரிவு: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

செய்திகள்7 மணி நேரங்கள் ago

தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

வணிகம்7 மணி நேரங்கள் ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்8 மணி நேரங்கள் ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா7 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா7 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா7 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

இந்தியா6 நாட்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

வணிகம்5 நாட்கள் ago

PM-VBRY திட்டம்: முதல் வேலை கிடைத்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை! இளைஞர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெங்களூரு DINK தம்பதியினர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா? ChatGPT சொன்ன பதில் இதுதான்

வணிகம்7 நாட்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.