தமிழ்நாடு
மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை எப்போது? அமைச்சர் பொன்முடி தகவல்
உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என சமீபத்தில் தமிழக் அரசு அறிவித்த நிலையில் அந்த ஊக்கத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் பொன்முடி தற்போது தகவல் தெரிவித்துள்ளார்.
தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு பதிலாக உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு மாணவிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்குவது போல் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்குமா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.