Connect with us

தமிழ்நாடு

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

Published

on

பொதுத் தேர்வு எழுதாத 6.70 லட்சம் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 6.70 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரிய வந்தது. இதனை அடுத்து தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு பெற்றோர் மற்றும் மாணவர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி அளித்தபோது ’தேர்வு எழுதாத மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வில் இத்தனை லட்சம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் மாணவர்கள் தேர்வு எழுதாததற்கான காரணம் ஆராயப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் வருங்காலத்தில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கு தேவையான விழிப்புணர்வை பள்ளி கல்வித்துறை ஏற்படுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.

எனவே தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

 

 

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?