Connect with us

உலகம்

புதினுடன் 50 நிமிடங்கள் பிரதமர் மோடி பேச்சு: உடனடியாக 4 நகரங்களில் போர் நிறுத்தம்!

Published

on

ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய சில நிமிடங்களில் நான்கு நகரங்களில் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ரஷ்யா அதிபர் புதின் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக சுமார் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாகவும் , உக்ரைனில் நடத்தப்பட்டுவரும் போர் குறித்து பிரதமர் மோடியிடம் புதின் விளக்கம் அளித்ததாகவும் வெளியாகி உள்ளன. மேலும் உக்ரைன் அதிபருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதற்கு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினிடம் கேட்டுக்கொண்டார். இந்த பேச்சுவார்த்தை நடத்திய சில நிமிடங்களில் இந்திய மாணவர்கள் அதிகமாக வாழும் நான்கு முக்கிய நகரங்களில் போர்நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?