Connect with us

தமிழ்நாடு

500 ரூபாய் சட்டை 50 ரூபாய்: கடை திறந்த 2 மணி நேரத்திற்குள் சீல் வைத்த அதிகாரிகள்

Published

on

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட புதிய ஜவுளிக் கடைக்கு இரண்டு மணி நேரத்தில் சீல் வைக்கப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

விராலிமலை தெப்பக்குளம் பகுதியில் புதிய ஜவுளிக் கடை ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது. கடை திறப்பு விழா சலுகையாக 500 ரூபாய் மதிப்புள்ள ஒரு சட்டை 50 ரூபாய் தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அறிந்து சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் புதிய துணி கடை முன்பு ஆர்வத்துடன் திரண்டனர். முன்னுரிமை அடிப்படையில் சட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு ஏராளமானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணியாமல் திரண்டிருந்தனர். கடை நிர்வாகமும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் சூழல் உருவானது.

இது குறித்து தகவலறிந்த விராலிமலை வட்டாட்சியர் கடை உரிமையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடைக்கு சீல் வைத்தார். இதனால் 50 ரூபாய்க்கு சட்டை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?