Connect with us

தமிழ்நாடு

கட்டிப்பிடித்து நலம் விசாரித்த பிடிஆர்-ஐ நல்லா பண்றீங்க தம்பி என பாராட்டிய மு.க.அழகிரி!

Published

on

திமுகவின் எஸ்ஆர் கோபியின் மகள் திருமணம் நேற்று மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பிடிஆர், முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரி ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டது பேசுபொருளாகியுள்ளது. மு.க.அழகிரி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

எஸ்.ஆர் கோபி ஒரு காலத்தில் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். இவர் மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அமைச்சர் பிடிஆர் ஆதரவாளராக உள்ளார். இந்நிலையில் அவரது மகள் திருமணம் அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெறுவதாக இருந்தநிலையில், உதயநிதியால் திருமணத்துக்கு செல்ல முடியவில்லை. இதனையடுத்து அமைச்சர் பிடிஆர் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்த திருமணத்துக்கு அமைச்சர் பிடிஆர் வந்த சிறிது நேரத்தில் மு.க.அழகிரி திருமண மண்டபத்துக்கு வந்தார். அப்போது அழகிரியை பார்த்ததும் அமைச்சர் பிடிஆர் அவர் அருகே சென்று கட்டிப்பிடித்து நலம் விசாரித்தார். இதனையடுத்து அழகிரியும் அவரை நலம் விசாரித்து நீங்க நல்லா பண்றீங்க தம்பி என்று பிடிஆரை பாராட்டினார்.

சமீபத்தில் மதுரைக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அழகிரியின் வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசிபெற்றார். இந்நிலையில் தற்போது பிடிஆர்-அழகிரி சந்திப்பு திமுக வட்டாரத்தில் விவாதப்பொருளாகியுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?