Connect with us

இந்தியா

பொருளாதாரம் பஞ்சராகிவிட்டது: பிரியங்கா காந்தி ஆவேசம்!

Published

on

இந்தியாவின் ஜிடிபி சதவீதம் 5 சதவீதமாக குறைந்துள்ளதை அரசியல் கட்சியினர் மற்றும் பொருளாதார நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

2019-20 ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் கணக்கு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி கடும் சரிவைச் சந்தித்துள்ளது. முந்தைய காலாண்டில் 5.8% என்ற அளவில் இருந்து ஜிடிபி 5 சதவிகிதமாக சரிவைச் சந்தித்துள்ளது. இது 7 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் சரிவாக பார்க்கப்படுகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் இதான் இந்த ஜிடிபி சரிவிற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், நல்ல காலம் பிறக்கும் என்று பாஜக அரசு கூறிவந்த நிலையில், பொருளாதாரம் பஞ்சராகிவிட்டது என்பதை ஜிடிபி புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

ஜிடிபியும் வளர்ச்சி அடையவில்லை. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயரவில்லை. வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை. பொருளாதாரம் மோசமான நிலைக்குச் செல்ல யார் பொறுப்பேற்பது என்பதை தெளிவுபடுத்துங்கள் என கடுமையாக சாடியுள்ளார் பிரியங்கா காந்தி.

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?