Connect with us

தமிழ்நாடு

பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு: 31 ஆண்டுகள் கழித்து விடுதலையாகிறார்.

Published

on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்ரம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் ஒட்டுமொத்த தமிழர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விடுதலைக்குப்பின் பேரறிவாளன் செய்தியாளர்களை சந்தித்தபோது அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்“ என்ற திருக்குறளை கூறி மேற்கோள்காட்டி நல்லவர்கள் வாழ வேண்டும் என்பது இயற்கையின் நியதி என்றும் எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல என்றும் கூறினார்.

மேலும் உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது என்றும் 30 ஆண்டுகாலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பாக தன்னுடைய தாய் தனது தனிப்பட்ட வாழ்க்கையை எனக்காகவே அர்ப்பணித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறையில் இருந்தபோது மக்சீம் கார்க்கியின் தாய் என்ற நாவலை நான்கு முறை படித்துள்ளேன் என்றும் அந்த நாவலை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் தனக்கு தைரியம் வந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?