Connect with us

தமிழ்நாடு

தமிழக முதல்வரை நேரில் சந்தித்த பேரறிவாளன்!

Published

on

30 ஆண்டுகளுக்கு மேலாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கியதற்காக தண்டனை அனுபவித்த பேரறிவாளன் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் விடுதலை ஆகியுள்ள நிலையில் அவர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய 7 தமிழர்களில் ஒருவர் பேரறிவாளன் என்பதும் இவரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பிய போதிலும் கவர்னர் அதை கவனத்தில் கொள்ளாமல் இருந்ததால் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது என்பது தெரிந்ததே.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்வதில் முடிவு எடுக்க கவர்னர் தாமதம் செய்ததால், தங்கள் அதிகாரத்தை வைத்து பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி தவிர பெரும்பாலான அரசியல்வாதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேரறிவாளன் விடுதலை குறித்த நீண்ட அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது முதல்வரை பேரறிவாளன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உடனிருந்தார். தனது விடுதலைக்காக முதல்வர் எடுத்த முயற்சிகளுக்கு பேரறிவாளன் தனது நன்றியை முதல்வரிடம் நேரில் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?