Connect with us

தமிழ்நாடு

ஆளுநர் செயல்படாத நேரத்தில் நீதிமன்றம் தலையிடும்: பேரறிவாளன் விடுதலை குறித்து முதல்வர் அறிக்கை

Published

on

ஆளுநர் செயல்படாத நேரத்தில் நீதிமன்றம் தலையிடும் என்பது பேரறிவாளன் விஷயத்திலும் உறுதியாகிவிட்டது என்றும் இதே போல் மற்ற விஷயத்திலும் தமிழகத்திற்கு நீதி கிடைக்கும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேரறிவாளன் விடுதலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். இது நீதி – சட்டம் – அரசியல் – நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு!. தமிழ்நாடு அரசின் வாதங்களை முழுமையாக ஏற்று இந்த இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை நிறுத்தி வைத்து தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுத் தாக்கல் செய்து இருந்தார். தமிழ்நாடு அரசு இந்த மனு மீதான விவாதத்தில் தனது அழுத்தமான கருத்தை முன் வைத்து வாதிட்டது. தமிழக அரசின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், “பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினால் போதுமானது.

இந்திய தண்டனைச் சட்டம் 302 மாநில அரசின் பொது அமைதிக்கு கீழ் வருகிறது. எனவே, அது மாநில அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. இந்த வழக்கில் பேரறிவாளனை விடுவிக்க மாநில அரசு முடிவு எடுக்க முழு அதிகாரம் உள்ளது. அரசியல் சாசன பிரிவு 161 படி அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் போதுமானது. அவர் புதிய முடிவு எடுக்கத் தேவை இல்லை. அரசு முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்ப தேவை இல்லை” என்று அழுத்தமாக வாதிட்டார்.

ஆனால் மத்திய அரசின் வழக்கறிஞர், ‘இதில் மாநில அரசுக்கு உரிமை இல்லை’ என்றும், ‘மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் தான் முடிவெடுக்க முடியும்’ என்று வாதிட்டார். ‘நீங்கள் முடிவெடுக்கும் வரை பேரறிவாளன் சிறையில் இருந்தாக வேண்டுமா?’ என்று நீதிபதிகள் கேட்டார்கள். அதற்கு மத்திய அரசின் வழக்கறிஞரால் பதில் அளிக்க முடியவில்லை.‘

உச்சநீதிமன்ற நீதியரசர்கள் மாண்புமிகு எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், போபண்ணா அடங்கிய அமர்வு, முதலில் பேரறிவாளனை பிணையில் விடுதலை செய்தது. இப்போது முழுமையான விடுதலையை வழங்கி உள்ளது. இப்படி விடுவிப்பதற்கு முன்னதாக நடந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் வைத்த வாதம், மாநில உரிமைகளை நிலைநாட்டுவதாக அமைந்திருந்தது. அதுவே இறுதித் தீர்ப்பாக வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மனிதாபிமான – மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும் அதே நிலையில் – மாநிலத்தின் உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலமாக மிகக் கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. இது இந்த வழக்கின் மற்றொரு மாபெரும் பரிமாணம் ஆகும்.

‘மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை’ என்று மாண்புமிகு நீதியரசர்கள் சொல்லி இருப்பது மிகமிக முக்கியமானது ஆகும். ‘ஆளுநர் செயல்படாத நேரத்தில் நீதிமன்றம் தலையிடும்’ என்று சொல்லி இருக்கிறார்கள் நீதிபதிகள். ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் கேட்கத் தேவையில்லை’ என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் நீதியரசர்கள்.

stalinஇதன் மூலமாக மாநில அரசின் அரசியல், கொள்கை முடிவுகளில் தனது அதிகார எல்லைகளைத் தாண்டி ஆளுநர்கள் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் மேலும் உறுதி ஆகி இருக்கிறது. இது தமிழ்நாடு அரசால், இந்தியா முழுமைக்குமான மாநில சுயாட்சி – கூட்டாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

2018 ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவை கூடி, எழுவர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. அதற்கு தமிழக ஆளுநர் அவர்கள் உடனடியாக ஒப்புதல் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அதனை அளவுக்கு மீறி தாமதம் செய்தார் தமிழக ஆளுநர். உடனடியாக இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

2020 நவம்பர் மாதம் மாண்புமிகு ஆளுநர் அவர்களைச் சந்தித்து, கடந்த முப்பது ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போது வலியுறுத்தினேன். 2018 ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னேன். பரிசீலிப்பதாக ஆளுநர் அவர்களும் அப்போது சொன்னார். ஆனால் முடிவெடுக்கவில்லை. திடீரென்று, குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலைக் கேட்டு அனுப்பியதாக ஆளுநர் மாளிகை அறிக்கை கொடுத்தது. இது அனைவர்க்கும் அதிர்ச்சி அளித்தது.

ஆட்சி மாற்றம் நடந்தது. கழக ஆட்சி அமைந்ததும், குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தோம். ஆளுநர் உங்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்துக்கு விளக்கம் தாருங்கள் என்று விளக்கம் கேட்டோம். குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அவர்கள் இப்படி ஒரு கடிதம் அனுப்பி இருந்ததால், குடியரசுத் தலைவரிடம் விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது.

stalinஅதேநேரத்தில், பேரறிவாளன் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்குத்தான் அனைத்து உரிமைகளும் உள்ளது என்று வாதிட்டோம். கிடைத்த வாய்ப்பு அனைத்தையும் பயன்படுத்தி – மாநில அரசுக்கு அரசியல் சட்டம் வழங்கி உள்ள 161 ஆவது பிரிவு உரிமையை நிலைநாட்டினோம்.

இதனையே தங்களது மையக் கேள்வியாக மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அவர்களும் எழுப்பினார்கள். “இது அமைச்சரவையின் முடிவு. அதில் ஆளுநருக்கு முடிவெடுக்கும் சுதந்திரமான இடம் உள்ளதா? ஏன் மத்திய அரசுக்கு அனுப்பினார்? அவர் மாநில அரசின் பிரதிநிதியா? ஆளுநருக்கு சில விலக்குகள் உள்ளன, ஆனால் இதுபோன்ற விஷயங்களில் எந்த உத்தரவையும் நிறைவேற்ற முடியாது. இந்த வழக்கில் ஆளுநருக்கு சுதந்திரமான விருப்புரிமை ஏதேனும் உள்ளதா? மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது ஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார் நீதிபதி நாகேஸ்வரராவ் அவர்கள். அந்த வகையில் மாநில அரசு தனது உரிமையை நிலைநாட்ட எடுத்த முயற்சிகள் அனைத்துக்கும் இறுதி வெற்றி கிடைத்துள்ளது.

இது முப்பது ஆண்டுகளைக் கடந்த சட்டப்போராட்டம் ஆகும். சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். கடந்த 2000-ஆம் ஆண்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற மூவரது தண்டனையையும் ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது.

அரசியல் சட்டம் 161 ஆவது பிரிவின் படி மாநில அரசின் உரிமையை நிலைநாட்டி அவர்களது விடுதலைக்கு தொடர்ந்து திமுக குரல் கொடுத்து வந்தது. எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆளும் கட்சியாக ஆனபோதும் ஒரே நிலைப்பாட்டை திமுக எடுத்தது.
ஆளும்கட்சியாக ஆனபிறகும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் – ஆளுநருக்கு அழுத்தம் – ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தல் – உச்சநீதிமன்றத்தில் அழுத்தமான வாதங்கள் என நாலா பக்கமும் முனைப்புடன் திமுக அரசு இயங்கியது. இறுதித் தீர்ப்பு இந்த அடிப்படையில் கிடைக்க இவை மிக முக்கியமான அடித்தளத்தை அமைத்திருந்தது.

சிறையில் இருந்த பேரறிவாளன், சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் சட்ட உரிமையின் அடிப்படையில் பரோல் கேட்டார். மனிதாபிமான அடிப்படையில் அரசு அவருக்கு அந்த உரிமையை 10 முறை வழங்கியது. பரோலில் இருந்தபடியே தனது சட்டப்போராட்டத்தை நடத்தி முதலில் பிணையில் வந்தார். இப்போது விடுதலை ஆகி இருக்கிறார்.

முப்பத்தி இரண்டு ஆண்டு கால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்த அந்த இளைஞர் இன்று விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகளும், வரவேற்பும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைந்திட எந்த எல்லை வரை சென்றும் போராடத் தயங்காத திருமதி. அற்புதம்மாள் அவர்கள், தாய்மையின் இலக்கணம். பெண்மையின் திண்மையை அவர் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன், ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு உண்டு என்பதைக் காலம் காட்டி இருக்கிறது. அற்புதம்மாளுக்கு என் வாழ்த்துகள்.

பேரறிவாளன் என்ற தனிமனிதனின் விடுதலையாக மட்டுமல்ல, கூட்டாட்சித் தத்துவத்துக்கும், மாநில சுயாட்சி மாண்புக்கும் இலக்கணமாகவும் அமைந்துவிட்ட இத்தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவுகூரத்தக்கது!

இவ்வாறு முதலமைச்சர் கூறி உள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மே 31ல் ராகுவின் வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, வெற்றி பெறப்போகும் 3 ராசிகள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மிதுனத்தில் உருவான திரிகிரக யோகம்: பணம், அதிர்ஷ்டம் குவியப்போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி: அக்டோபர் வரை 12 ராசிகளின் வாழ்க்கையில் என்ன மாற்றம்?

பர்சனல் ஃபினான்ஸ்18 மணி நேரங்கள் ago

தங்கத்தில் முதலீடு செய்வதை எப்போது நிறுத்த வேண்டும்? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய சிக்னல்கள்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ரயிலில் TTE பணம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்? இந்த ரயில் விதிகள் தெரிந்தால் ஏமாற மாட்டீர்கள்!

இந்தியா18 மணி நேரங்கள் ago

ரூ.2.87 லட்சம் கோடி RBI டிவிடெண்ட்.. மாநிலங்களுக்கு பங்கு இல்லையா? மத்திய அரசை கேள்வி கேட்ட முதல்வர்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

விமான டிக்கெட் ரத்து செய்த பயணிக்கு அதிர்ச்சி.. ரூ.4,764 கட்டணம் வசூலித்த தளம்.. சமூக வலைதளத்தில் வெடித்த சர்ச்சை!

வணிகம்23 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: 3 மடங்கு வரை சம்பள உயர்வு கிடைக்குமா? ஃபிட்மெண்ட் ஃபாக்டர் விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு5 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? முக்கிய அப்டேட் வெளியீடு!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவுக்கு முன் IRTSA அதிரடி கோரிக்கை: DA, HRA, OPS உள்ளிட்ட பல மாற்றங்கள் வலியுறுத்தல்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

வணிகம்6 நாட்கள் ago

Aadhaar Update Alert: ஜூன் 14க்குள் இலவசமாக ஆதார் அப்டேட் செய்யுங்கள்! இல்லையெனில் கட்டணம் கட்ட வேண்டும்!

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. Aaa mush love. Security.