Connect with us

இந்தியா

இந்தியாவில் ஒமிக்ரான் BF.7 வைரஸ்: மீண்டும் லாக்டவுன், தடுப்பூசி கட்டுப்பாடுகளா?

Published

on

சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் நிலையில் அண்டை நாடான இந்தியாவிலும் மூன்று நபர்களுக்கு உண்மை ஒமிக்ரான் BF.7 வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒமிக்ரான் BF.7 வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் குஜராத் மாநிலத்திலும் ஒருவரோடு ஒடிசாவிலும் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்த இரு மாநிலங்களில் ஒமிக்ரான் BF.7 வைரஸ் தீவிரத்தன்மை இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வர்கள் அவசர கூட்டத்தை கூடிய நிலையில் ஒமிக்ரான் BF.7 வைரஸ் என்பது கவலைக்குரிய விஷயம் அல்ல என்றும் ஆனால் அதே நேரத்தில் நாம் கண்காணிப்பு மற்றும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் தற்போது மிக அதிகமாக ஒமிக்ரான் BF.7 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின் நிலையை மதிப்பிடுவதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக முடியவில்லை என்பதை கருத்தில் கொண்டு அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கண்காணிப்பை மாநில அரசுகள் அதிகப்படுத்த வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இதுவரை கோவிட் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி கொள்ளும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். இதுவரை இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவருக்கும் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதும் ஒரு சிலருக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இனியும் ஒரு டோஸ் செலுத்த வேண்டுமா என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆரம்ப நிலையிலேயே ஒமிக்ரான் BF.7 வைரஸ் பரவலை கண்டுபிடித்து கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்தியாவில் இன்னொரு கொரோனா வைரஸ் அலை ஏற்படாமல் தடுக்க முடியும் என்றும் இதில் நாம் கவனக்குறைவாக இருந்தால் மீண்டும் லாக்டோன், மாஸ்க், தடுப்பூசி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிவரும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?