தமிழ்நாடு
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது: நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்!
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அகதிகளாக வந்த இலங்கை தமிழர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக தமிழகத்தில் நாங்கள் குடியிருக்கின்றோம் என்றும், எங்களது பூர்வீகம் தமிழ்நாடு தான், எங்களது முன்னோர்கள் வணிகரீதியாக இலங்கைக்கு சென்றார்கள் என்றும், தற்போது அங்கு உள்ள அரசியல் சூழலின் காரணமாக மீண்டும் அகதிகளாக நாங்கள் தமிழகம் திரும்பி விட்டோம் என்றும், எனவே எங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இலங்கை அகதிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்
இந்த மனுவை கடந்த 2019ஆம் ஆண்டு நீதிபதி சுவாமிநாதன் விசாரணை செய்து இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றது? அவர்களது மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தலைமை நீதிபதி அமர்வு முன் மத்திய அரசு மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ’இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு குடியேறியவர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளார்கள் என்றும், எனவே அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது இயலாத காரியம் என்றும், எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று வாதிட்டார்
ஆனால் தலைமை நீதிபதி இதுகுறித்து கூறியபோது, ‘தனி நீதிபதி உத்தரவு என்பது உங்களுக்கு குடியுரிமை கொடுக்க சொல்லி உத்தரவு பிறப்பிக்க கிடையாது என்றும் அவர்களுடைய மனுவை பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், அதாவது மனுவை ஏற்றுக்கொண்டு குடியுரிமை வழங்கலாம் அல்லது நிராகரிக்கலாம் என்றுதான் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் என்றும், எனவே மத்திய அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் ஏன் தற்போது மேல்முறையீடு செய்தீர்கள் என்று மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞருக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்
பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு இலங்கை அகதிகளாக உள்ள பல்வேறு மனுதாரர்களுக்கு உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தற்போது அடுத்த மாதத்திற்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.