Connect with us

தமிழ்நாடு

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது: நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்!

Published

on

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அகதிகளாக வந்த இலங்கை தமிழர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக தமிழகத்தில் நாங்கள் குடியிருக்கின்றோம் என்றும், எங்களது பூர்வீகம் தமிழ்நாடு தான், எங்களது முன்னோர்கள் வணிகரீதியாக இலங்கைக்கு சென்றார்கள் என்றும், தற்போது அங்கு உள்ள அரசியல் சூழலின் காரணமாக மீண்டும் அகதிகளாக நாங்கள் தமிழகம் திரும்பி விட்டோம் என்றும், எனவே எங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இலங்கை அகதிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்

இந்த மனுவை கடந்த 2019ஆம் ஆண்டு நீதிபதி சுவாமிநாதன் விசாரணை செய்து இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றது? அவர்களது மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தலைமை நீதிபதி அமர்வு முன் மத்திய அரசு மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ’இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு குடியேறியவர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளார்கள் என்றும், எனவே அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது இயலாத காரியம் என்றும், எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று வாதிட்டார்

ஆனால் தலைமை நீதிபதி இதுகுறித்து கூறியபோது, ‘தனி நீதிபதி உத்தரவு என்பது உங்களுக்கு குடியுரிமை கொடுக்க சொல்லி உத்தரவு பிறப்பிக்க கிடையாது என்றும் அவர்களுடைய மனுவை பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், அதாவது மனுவை ஏற்றுக்கொண்டு குடியுரிமை வழங்கலாம் அல்லது நிராகரிக்கலாம் என்றுதான் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் என்றும், எனவே மத்திய அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் ஏன் தற்போது மேல்முறையீடு செய்தீர்கள் என்று மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞருக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்

பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு இலங்கை அகதிகளாக உள்ள பல்வேறு மனுதாரர்களுக்கு உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தற்போது அடுத்த மாதத்திற்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா40 minutes ago

விண்வெளியில் சேகரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரமாக மாற்றப்பட்டு மைக்ரோவேவ் மூலம் பூமிக்கே ஜப்பானின் “OHISAMA” திட்டம்,

இந்தியா60 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.05.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.05.2026

இந்தியா11 மணி நேரங்கள் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 25.05.2026!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கல்கள், நஷ்டம் சந்திக்கக்கூடிய 3 ராசிகள்!

உலகம்13 மணி நேரங்கள் ago

“தோல்வியாளர்களை கேட்காதீர்கள்” – ஈரான் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடிவாகவில்லை: டிரம்ப்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 25 மே 2026

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

மே 31ல் ராகுவின் வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, வெற்றி பெறப்போகும் 3 ராசிகள்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வணிகம்7 நாட்கள் ago

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? முக்கிய அப்டேட் வெளியீடு!

தமிழ்நாடு5 நாட்கள் ago

இருமொழிக் கொள்கை தொடரும்: PM SHRI திட்டம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல்

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. 🧠 johns hopkins center for psychedelic research. Security.