செய்திகள்
தமிழகத்தில் இரண்டு மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு……பீதியில் பொதுமக்கள்…
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு,கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
தமிழகத்தில் 30 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து கடந்த 4 மாதங்களாக 750ஆக இருந்து வருகிறது. ஆனால், கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. நேற்று முன் தினம் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.
இந்நிலையில், நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 1489 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 682 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.