செய்திகள்
சட்டசபையில் ஆண்மையோடு பேசும் அதிமுகவினர் யாருமில்லை – பாஜக எம்.எல்.ஏ பேட்டி
2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்தது. திமுக எதிர்கட்சியாக இருந்து. 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதிமுக எதிர்கட்சியாக மாறியுள்ளது.
ஆனால், 4 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள பாஜக தமிழகத்தில் எதிர்கட்சி போல செயல்பட்டு வருகிறது. திமுகவுக்கு எதிராக எப்போதும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவ்வப்போது போராட்டங்களையும் நடத்துகிறார்கள்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ‘தமிழகத்தில் தற்போது அதிமுக எதிர்கட்சி இல்லை. பாஜகதான் எதிர்கட்சி போல செயல்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவரை கூட பார்க்க முடியவில்லை. எதிர்க்கட்சியாக இல்லாமலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மட்டுமே’ என பேட்டி கொடுத்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி ‘நீங்களாம் ஆம்பளயா.. உங்களுக்கெல்லாம் ஆண்மை இருக்கிறதா?’ என அதிமுகவினரை கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பாஜக எம்.எல்.ஏ ஒருவர் அதே கருத்தை கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.